தபால் வாக்களிப்பு குறித்த பயிற்சி வகுப்பு

இடைப்பாடி, மார்ச் 21: இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில், தபால் வாக்களிப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான தபால் வாக்களிப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு, நேற்று மாலை நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன், தலைமையில் நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மண்டல அலுவலர்களுக்கு தபால் வாக்கு சீட்டு வழங்கும் நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்டோருக்கான விண்ணப்பங்கள் பெறுதல், அவற்றை சரிபார்த்தல், தபால் வாக்கு சீட்டுகளை வழங்குதல் மற்றும் வாக்கு பதிவு செயல்முறைகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 37 மண்டல அலுவலர்கள், 342 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: