மூன்றடைப்பு அருகே வாலிபரை கல்லால் தாக்கிய 4 பேர் கைது

நெல்லை, செப். 12: மூன்றடைப்பு அருகே ஆழ்வாநேரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி (32). இவர் கடந்த 6ம்தேதி ரெட்டியார்பட்டியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் இவரது புகைப்படம் இருந்த பகுதியில் கிழிந்துள்ளது. ஆத்திரடைந்த அவர் திருமண வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் அவருக்கும் சன்னல்பட்டியைச் சேர்ந்த வேலு, சங்கர், சுப்பிரமணி, பிச்சுராஜன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்குச் சென்ற இசக்கிப்பாண்டி ஆழ்வாநேரி அம்மன் கோயில் முன்பு நின்றபோது வேலு உட்பட 4 பேர் கற்களால் தாக்கிவிட்டு தப்பினர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்ைல அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலு, சுப்பிரமணி ஆகிய 2 பேரை மூன்றடைப்பு போலீசார் கைது செய்தனர். நேற்று சங்கர், பிச்சுராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

The post மூன்றடைப்பு அருகே வாலிபரை கல்லால் தாக்கிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: