வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நிதி உறுதி மொழி ஏற்பு

 

நீடாமங்கலம், செப்.17: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்து அனைத்து அலுவலகங்களிலும் செப்டம்பர் 17 கடைபிடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு செப்டம்பர் 17 மிலாடி நபி முன்னிட்டு விடுமுறை நாளானதால் முன்னதாக செப்டம்பர் 16ம் நாள் உறுதிமொழி எடுக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வலியுறுத்தியதை தொடர்ந்து நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

The post வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நிதி உறுதி மொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: