நெடுங்காட்டில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் சந்திரபிரியங்கா எம்எல்ஏ விவசாயிகளுக்கு வழங்கினார்

 

காரைக்கால், செப்.17: நெடுங்காட்டில் ரூ.11.50 லட்சத்தில் மானிய விலையில் விவசாய இயந்திரங்களை சந்திரபிரியங்கா எம்எல்ஏ வழங்கினார். காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கத்திற்கு மானியத்துடன் கூடிய ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் டிராக்டர் மற்றும் ரோட்டேட்டர்,புழுதி கலப்பை போன்றவற்றை கொள்முதல் செய்யப்பட்டது. புதிதாக வாங்கப்பட்ட விவசாய களப்பணி இயந்திரங்கள் விவசாய பயன்பாட்டிற்கு நேற்று முதல் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு விவசாயிகள் சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய சந்திர பிரியங்கா எம்எல்ஏ, புதிதாக வாங்கப்பட்டுள்ள விவசாய இயந்திரங்கள் மூலம் பொது விவசாய உறுப்பினர்களுக்கு 50% மானியத்திலும்,ஆதிதிராவிட விவசாய உறுப்பினர்களுக்கு 75% மானியத்திலும் உழவு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை விவசாயிகளுக்கு தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் விவசாய சங்கத்தின் தலைவர் கேசவன் (எ) முருகேசன்,நெடுங்காடு விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்க இயக்குனர்கள் மரிய சூசை நாதன்,கலியபெருமாள் மற்றும் சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post நெடுங்காட்டில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் சந்திரபிரியங்கா எம்எல்ஏ விவசாயிகளுக்கு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: