இந்திய ஒற்றுமை பயண தெருமுனை பிரசார கூட்டம்

 

கும்பகோணம், செப். 16: கும்பகோணம் மாநகர காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் தெருமுனை பிரசாரகூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மாநகர காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் தெருமுனை பிரசாரகூட்டம் மாநகர தலைவர் மிர்ஷாதீன் தலைமலயில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சரவணன் முன்னிலை வகித்தார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த தெருமுனை பிரசாரகூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், நிர்வாகிகள் தண்டாளம் சரவணன், செந்தில், கருணாகரன், ரியாஸ், ஷாஜகான், சாகுல், ஜெயபால், மணிராஜ், சாதிக், லாரன் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post இந்திய ஒற்றுமை பயண தெருமுனை பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: