ஆலத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

 

பாடாலூர், செப்.17: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (17ம் தேதி) நடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று 17 ம் தேதி காலை 10.30 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை தாங்கி, இந்திய அரசின்ADIP திட்டத்தின் கீழ் ALIMCO (Artificial limbs Manufacturing Corporations of india) நிறுவனத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குகிறார்.

The post ஆலத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: