மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாளர் நாள் நிகழ்ச்சி

தூத்துக்குடி, செப். 12: தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக கூட்டரங்கில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கான பணியாளர் நாள் நிகழ்ச்சி, நாளை (13ம் தேதி) நடக்கிறது. தூத்துக்குடி மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கான பணியாளர் நாள் நிகழ்ச்சி, நாளை(13ம் தேதி) முற்பகல் 10.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முரளிகண்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024-25ம் ஆண்டுக்கான கூட்டுறவு துறை மானிய கோரிக்கையின் போது கூட்டுறவு துறை அமைச்சரால் ‘கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தங்களது குறைகளை பணியாளர் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

The post மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாளர் நாள் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: