மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Related Stories: