விபத்து நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட சூழலில், விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானி வின்சென்ட் லைன் தெரிவித்துள்ளார். இது குறித்த கட்டுரையை வெளியிட்டுள்ள அவர், எம்எச் 370 மர்மம் அறிவியலால் அகன்றது என்று அதற்கு தலைப்பிட்டுள்ளார். அந்த ஆய்வு கட்டுரையில், இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்கே 6,000 மீ. ஆழ துளையில் விமானம் வேண்டுமென்றே மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகளைக் கொண்ட இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் விமானம் மறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த விபத்து விமானியால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாகவும் விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் இந்திய பெருங்கடலில் 7வது வளைவில் விமானம் விழுந்ததாக வெளியான தகவலை மறுத்து, விபத்துக்குள்ளான விமானத்தில் எரிபொருள் இருந்தது என்றும் உறுதிப்பட தெரிவித்தார். விமானம் விழுந்த இடம் கரடுமுரடான ஆபத்தான சூழலுக்குள் 6,000 மீட்டர் ஆழம் என்றும் அதில் விழுந்தால் விமானத்தை கண்டுபிடிப்பது சிரமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
The post 10 ஆண்டுகளுக்கு முன் 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் விமானியால் வேண்டுமென்றே கடலில் மூழ்கடிக்கப்பட்டது : விஞ்ஞானி பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.