கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, ஆக.24: கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலை லக்கசந்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்த போது, அதில் ₹50 ஆயிரம் மதிப்புள்ள கிரானைட் கல் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து கனிமவள அதிகாரி சரவணன் கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: