16 வயது சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, செப்.12: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை சேர்ந்த 16 வயது சிறுமி, மாரண்டஅள்ளி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 2 நாட்களுக்கு முன், சிறுமி தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் குடிமேனஹள்ளி தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்றாள். அப்போது ஆற்றங்கரையில் உட்கார்ந்திருந்த சிறுமி, திடீரென மாயமானாள். அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், தர்மபுரி மாரண்டஅள்ளியை சேர்ந்த பெருமாள் (எ) ஆகாஷ்(21) என்பவர், மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 16 வயது சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: