குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

 

கிருஷ்ணகிரி, செப்.11: பர்கூர் விஐபி நகரை சேர்ந்தவர் முரளி (32), ஜவுளி கடையில் ஊழியராகபணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவுமியா (27). இவர்கள் கடந்த 9 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பர்வேஷ் (6), தர்ஷன் (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி வீட்டில் இருந்து குழந்தைகளுடன் வெளியே சென்ற சவுமியா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி முரளி பர்கூர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: