மத்தூரில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

போச்சம்பள்ளி, செப்.13: மத்தூர் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழரின் பாரம்பரிய கரகாட்டம், தப்பாட்டம், மூலம் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பேரணி நடைபெற்றது. இதில் பெண்கள் கருவுற்ற காலத்திலிருந்து குழந்தை பெற்ற பின் 24 மாதங்கள் வரை, தாய் சேய் நல மருத்துவ பதிவேட்டில் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். முழுமையான விவரங்களை அளிக்க வேண்டியது அவசியம் என உணர்த்தப்பட்டது.

The post மத்தூரில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: