இளம்பெண்ணுக்கு கொடுமை

கிருஷ்ணகிரி, செப்.6: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கத்தேரி மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் யுவ (22). இவருக்கும், கிருஷ்ணகிரி பாலகுறி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சக்திவேல், செல்போன் கடை வைத்துள்ளார். இந்நிலையில், அந்த கடை நடத்துவதற்கு கூடுதலாக பணம் தேவைப்படுவதாக கூறி, பெற்றோர் வீட்டிற்கு சென்று வாங்கி வரும்படி கூறி சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் யுவ புகார் அளித்தார். அதன்பேரில், சக்திவேல் மற்றும் அவரது தந்தை முருகேசன், தாய் சின்னபிள்ளை, அண்ணன் விஜய், விஜயின் மனைவி அபிராமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண்ணுக்கு கொடுமை appeared first on Dinakaran.

Related Stories: