டூவீலர் மீது ஜீப் மோதி வாலிபர் பலி

ஓசூர், செப்.12: ஓசூர் அடுத்த பாகலூர் காஜல்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் கடந்த 9ம் தேதி மதியம், பாகலூர்-வெங்கடராயபுரம் சாலையில், ஈச்சங்கூர் நகர் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஜீப், டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுபற்றி பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது ஜீப் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: