இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மதீஷா பத்திரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் விலகல்

கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மதீஷா பத்திரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகினர். இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. இரு அணிகளுக்குமிடையேயான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வாய் அறிவித்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் களமிறங்க உள்ளதால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான பத்திரனா மற்றும் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து தொடரிலிருந்து வெளியேறியதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

பத்திரனா முந்தைய 3வது டி20 ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க டைவிங் செய்யும்போது அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க இந்தியாவுக்கு எதிரான டி20I தொடரின் தொடக்க ஆட்டத்தில் இடம்பெற்றிருந்தார்.

ஆனால் பீல்டிங் பயிற்சியின் போது அவருக்கு ஏற்பட்ட கிரேடு 2 தொடை காயம் காரணமாக இப்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கு பதிலாக மொஹமட் ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரைத் தவிர, குசல் ஜனித் பெரேரா, பிரமோத் மதுஷன், மற்றும் ஜெஃப்ரி வான்டர்சே ஆகியோர் அணியில் காத்திருப்பு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (c), பாத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன, மொயேஷ் கருணாரத்ன, மொய்கே தனஞ்சய, மொய்கே தனஞ்சய அசித்த பெர்னாண்டோ, எஷான் மலிங்கா

The post இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மதீஷா பத்திரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் விலகல் appeared first on Dinakaran.

Related Stories: