டூவீலர் மீது கார் மோதி காண்ட்ராக்டர் பலி

கிருஷ்ணகிரி, ஜூலை 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பில்டிங் காண்ட்ராக்டராக இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி டூவீலரில் திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சங்கர் சென்று கொண்டிருந்தார். ஜெகதேவி ஜிட்டோபனப்பள்ளி அருகே வந்தபோது அவ்வழியாக வந்த கார் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது கார் மோதி காண்ட்ராக்டர் பலி appeared first on Dinakaran.

Related Stories: