அவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவியாக மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வீதமும், எதிர்பாரா செலவினங்களுக்காக கலைப்பிரிவு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியரின் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஆனால், அதன்பின் 4 மாதங்களாகியும் அவர்களுக்கு தேர்ச்சிக் கடிதம் வழங்கப்படவில்லை. மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது. விரைவில் தேர்ச்சி கடிதம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை மாணவர்களுக்கு விரைவில் தேர்ச்சி கடிதத்தை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.