இதனால் வாலுடன் பிறந்த குழந்தையை எய்ம்ஸ் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கடந்த ஜனவரியில் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வாலை அகற்றினர். தொடர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு, நரம்பியல் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து எய்ம்ஸ் டாக்டர்கள் கூறியதாவது: அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை 5 நாட்கள் உள்நோயாளியாக டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. அதன் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது அசாதாரணமான வளர்ச்சி. முதுகுத்தண்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுவரை உலகில் வாலுடன் 40 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் வாலுடன் பிறந்த ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தபின் நரம்பியல் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
The post தெலங்கானாவில் விநோதம் 15 செ.மீ நீளமுள்ள வாலுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர் appeared first on Dinakaran.