அங்கு டிரைவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் கண்டெய்னரில் கோழி இறைச்சி கழிவுகள் இருப்பதாகவும், கும்பகோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். ஆனால் கடும் துர்நாற்றம் வீசியதால் கண்டெய்னரை போலீசார் திருப்பி அனுப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த கண்டெய்னரில் கோழி கழிவுகள் உள்ளது.
ஆனால் போலீசார் வாகனத்தை சோதனை செய்யாமலும், நடவடிக்கை எடுக்காமலும் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும். ஆந்திரா கொண்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு தமிழ்நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் இந்த கழிவுகள் கொட்டப்படலாம். போலீசார் இதனை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.
The post கோழி கழிவு ஏற்றிச்சென்ற கண்டெய்னரை மடக்கி போலீசில் ஒப்படைத்த மக்கள் appeared first on Dinakaran.