2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கச்சேரி ரோடு முக்கூட்டில் கடந்த ஜூன் 27ம் தேதி பட்டப்பகலில் மதன்குமார் (40), உறவினர் மணிகண்டன் (32) ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதேபோல் மதன்குமார் சகோதரர் சுரேஷையும் (33) மர்ம நபர்கள் இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்.இச்சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்த நிலையில் சீர்காழி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து 4 பேரை கடந்த 29ம் தேதி கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான அருண்குமார் (33), செந்தில்குமார் (34) ஆகிய 2 இரண்டு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை எஸ்பி மீனா, பட்டப்பகலில் இரண்டு பேர் வெட்டப்பட்ட சம்பவத்தன்று பணியில் மெத்தனமாக இருந்ததாக சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை நாகை ஆயுதப்படைக்கும், சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை குத்தாலத்திற்கும், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசனை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், காவலர் அகஸ்தியன், ஏட்டு குலோத்துங்கன், சிறப்பு எஸ்ஐக்கள் சதீஷ் குமார், ராஜாஜி ஆகியோரை மணல்மேடு காவல் நிலையத்திற்கும் பணி மாற்றம் செய்து நேற்று மாலை உத்தரவிட்டார்.

The post 2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: