சுயலாபம், அதிகார வெறிபிடித்த தலைவர்களால் அதிமுக கரைகிறது பிரதமர் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி எடப்பாடி: அண்ணாமலை ஆவேச பதிலடி


பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விக்கிரவாண்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு கண்முன்னால் அதிமுக என்ற அற்புதமான கட்சியை தங்களின் சுயலாபத்துக்காக, அதிகார வெறிக்காக கூட இருக்கிற 2 பேரை பத்திரிகைகளில் பேச வைத்து எப்படியாச்சும் அதிமுகவை காப்பாற்றிவிடலாம் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கனவு கண்டுகொண்டிருக்கிறார். 3, 4 தலைவர்களின் சுயலாபத்துக்காக அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது.

நம்பிக்கை துரோகி என்ற பெயர் பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்குதான். பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி. பிரதமர் டெல்லியில் அழைத்து சென்று பக்கத்திலே உட்காரவைப்பார். ஆனால் இங்கு வந்து சுயலாபத்திற்காக இதைவிட அக்கறை பச்சை, இந்த கரையை விட அந்தகரைக்கு போய்விடலாம் என்பதற்காக பாஜ வேண்டாம் என்று ஒதுங்கி சென்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதற்கு மக்கள் என்ன பாடம் புகட்டினார்கள். பல இடங்களில் டெபாசிட் இழக்க வைத்தார்கள்.

தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் இவ்வளவு பெரிய கட்சி, நம்பர் 2 கட்சி, நம்பர் 1 கட்சி, ஆளும் கட்சியாக இருந்து எத்தனை இடங்களில் டெபாசிட் இழந்திருக்கு. ஒரு கின்னஸ் ரெக்கார்டாக அத்தனை இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்திருக்கு. காரணம் அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும்கூட தலைவர்கள் சரியில்லை. அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்கு நாங்கள் இபிஎஸ் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலில் 134 வாக்குறுதிகளை அளித்தார். எப்ப நிறைவேற்றபோகிறார். இன்று எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.

கோவைக்கும், தமிழகத்திற்கு நாங்கள்கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு 134 வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார். எப்ப நிறைவேற்றுவார். எம்பி இல்லாமல் எப்படி நிறைவேற்றுவார். எங்கு சென்று பேசுவார். பேசுவதற்கு முன்பே சிந்தித்து பேசவேண்டும். கோவையில் அதிமுக 13 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி டெபாசிட் தக்க வைத்தார்கள்.
வெறும் டெபாசிட் வாங்கின கட்சி பாஜவை குறை சொல்கிறார்கள்.

கோவை உங்களது கோட்டைதானே, 10க்கு 9 எம்எல்ஏ வைத்திருக்கிறீர்கள். 6க்கு 6 மாநகரத்தில் எம்எல்ஏ உங்களது தானே. எதற்கு 17 சதவீதத்திற்கு போனீங்க. உங்களைவிட 2 மடங்கு 34 சதவீதத்துக்கு மேல பாஜ ஓட்டு வாங்கிருக்கு. கோவையில் 6 எம்எல்ஏக்களை வைத்துகொண்டு 3 சட்டமன்ற தொகுதியில் டெபாசிட் இழந்திருக்கு. சிங்காநல்லூர் அவருடைய வேட்பாளர் இருக்கக்கூடிய சொந்த தொகுதி டெபாசிட் போயிருக்கு. எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை கூறுகிறார். அவங்க கட்சி கண்முன்னே கரையானைபோல் கரைந்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி கண்ணாடியை எடுத்து முகத்தை நன்றாக பார்க்கவேண்டும். நல்லா பார்த்துகிட்டா அதிமுகவின் பொதுச்செயலாளராக எப்படி இருக்க வேண்டுமென்று கண்ணாடி அறிவுரை சொல்லும். ஆகையால் எனக்கு அறிவுரை கூறவேண்டாம். அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்கு நாங்கள் இபிஎஸ் இல்லை. விக்கிரவாண்டி இடைதேர்தலை புறக்கணிக்க நீங்க சொன்ன காரணம் என்ன?.

இதே மாநில தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்ற தேர்தல் நடத்தும்போது புறக்கணிப்பாரா?. புது, புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் வித்தகராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக மக்களுக்கு பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவராக அவர்செயல்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ஈரோடு இடைத்தேர்தல் அடம் பிடித்த எடப்பாடி ஒதுங்கி நின்ற ஓபிஎஸ்
அண்ணாமலை கூறுகையில், ‘எங்கள் கட்சி மத்தியில் 3வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் உங்களுக்கு எத்தனை தோல்வி. 2019 முதல் தொடர் தோல்வி. ஈரோட்டை சொந்த ஊர், சொந்த கோட்டை என்று சொல்லியிருந்தார். அன்று என்னிடம் போனில் தொடர்புகொண்டு ஈரோடு இடைதேர்தலை பற்றி பேசினார்.

ஒன்றரை லட்சம் வாக்குகளில் வெற்றி பெறுவேன். நான் மட்டும் நிற்கவேண்டும். ஓபிஎஸ்சிடம் அறிவுறுத்துங்க, நான் மட்டும் நிற்க ஏற்பாடு செய்யுங்க என்று சொன்னார். கன்னியமாக, கம்பீரமாக ஓபிஎஸ் ஒதுங்கி நின்றார். அவருக்கு என்ன மரியாதை கொடுத்தீர்கள். ஈரோடு இடைதேர்தலில் எத்தனை ஓட்டுவாங்கினீர்கள். பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்கள். இன்று ஈரோடு இடைதேர்தல் சீக்ரெட் அண்ணாமலைக்கு தெரியும். தெரிஞ்சும் சரித்தரத்தை திருத்தி பேசுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதை நான் கண்டிக்கிறேன்’ என்றார்.

The post சுயலாபம், அதிகார வெறிபிடித்த தலைவர்களால் அதிமுக கரைகிறது பிரதமர் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி எடப்பாடி: அண்ணாமலை ஆவேச பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: