ரேஷன் பொருள் விநியோகத்தை சீர்செய்ய எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் மூன்று மாதமாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்ற மாதமே ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்தேன்.

முறையாக கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது, ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது. ரேஷன் பொருட்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி, அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ரேஷன் பொருள் விநியோகத்தை சீர்செய்ய எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: