டூவீலர் மோதி முதியவர் படுகாயம்

தர்மபுரி, ஜூலை 3: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே அச்சன்வாடி பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம் (53). இவர் அரூர் -சேலம் சாலை, மாணவர் விடுதி அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டூவீலர் திருவேங்கடம் மீது மோதியது. விபத்தில் பலத்த காயம் அடைந்த திருவேங்கடத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் திருவேங்கடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரூர் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மோதி முதியவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: