புதுகை மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூலை 5: புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கான தகுதியான விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பூமாலை வணிக வளாகம் புதுக்கோட்டை அலுவலகத்திற்கு 25ம்தேதிக்குள் விண்ணப்பங்களை பின்வரும் தகுதியின் அடிப்படையில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட வள பயிற்றுநருக்கான கல்வித்தகுதி மற்றும் முன்அனுபவம், சமூகவியல், சமூகப்பணி, சமூகப்பணி மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் மற்றும் 6 வருட அனுபவம் (அல்லது) அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் 8 முதல் 10 வருட அனுபவம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தை உருவாக்குதல் மற்றும் திறன் மேம்பாடு (குறிப்பாக சுய உதவிக்குழு கூட்டமைப்பு மாதிரி) வறுமைக்குறைப்பு திட்டத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த எழுதுதல், வாசிப்பு திறன்.

மேலாண்மை மற்றும் நிதி திட்டமிடல். சமுதாய சார்ந்த அமைப்புகள் பதிவு மற்றும் சட்ட அம்சங்களை பற்றிய நல்ல அறிவு இருந்திருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய விரிவான புரிதல் இருந்திருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் திட்டங்கள் தொடர்பாக முகாம் பணிகளுக்கு செல்வதற்கு பயணங்கள் மேற்கொள்ளுதல் வேண்டும். கணினி அறிவு நிறைந்தவராக இருத்தல் வேண்டும். இந்த தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

The post புதுகை மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: