மகப்பேறு மருத்துவமனையில் பூட்டி கிடக்கும் உதவியாளர்கள் தங்கும் அறை விரைவில் திறக்கப்படும்: ராஜபாளையம் நகராட்சி உறுதி

 

ராஜபாளையம், ஜூலை 5: ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா பெயரில் அரசு மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு தினசரி அதிகமான எண்ணிக்கையில் பிரசவம் மற்றும் சிகிச்சைக்காகவும் பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு பிரசவம் பார்க்க வரும் பெண்களுக்கான உதவியாளர்கள் தங்குவதற்கான அறைகள் ராஜபாளையம் நகராட்சி சார்பில் 2017ம் ஆண்டு கட்டப்பட்டு அனைவரும் பயன்பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக இந்த அறைகள் பூட்டப்பட்டே கிடக்கின்றன. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பாக வரும் அவர்களது தாய்மார்கள் மற்றும் உறவினர்கள், குழந்தைகள் வெளியே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் காத்து கிடக்கும் நிலை உள்ளது. இது குறித்து ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் நாகராஜனிடம் கேட்டபோது, இந்த தகவலை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுத்து, இன்னும் ஓரிரு தினங்களுக்குள் சரி செய்யப்பட்டு, திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று உறுதியளித்தார்.

The post மகப்பேறு மருத்துவமனையில் பூட்டி கிடக்கும் உதவியாளர்கள் தங்கும் அறை விரைவில் திறக்கப்படும்: ராஜபாளையம் நகராட்சி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: