அரியானாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து

சண்டிகர்: அரியானாவி ல் சரக்கு ரயிலின் சில கண்டெய்னர்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இது கர்னால் மாவட்டம் தாரோரி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post அரியானாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: