சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

பெங்களூரு: கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணன் சூரஜ் ரேவண்ணா (36). மதசார்பற்ற ஜனதா தள எம்எல்சியுமான இவர் மீது அக்கட்சியை சேர்ந்த 2 இளைஞர்கள் ஹோமோசெக்ஸ்க்கு கட்டாயப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஹொலெநர்சிப்புரா போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். பிரஜ்வல் ரேவண்ணா வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரே இவரிடமும் விசாரணை நடத்தினர்.

சூரஜ் ரேவண்ணாவின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 42-வது பெருநகர கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் தரப்பில் மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், வரும் 18ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து சூரஜ் ரேவண்ணா பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதே சிறையில்தான் பிரஜ்வல் ரேவண்ணா, கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

The post சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல் appeared first on Dinakaran.

Related Stories: