உலக கோப்பைக்கான அணியில் அங்கம் வகித்த சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோரும் ஜிம்பாப்வே தொடரில் விளையாட இருந்தனர். தென் ஆப்ரிக்காவுடன் நடந்த பரபரப்பான பைனலில் வென்று 2வது முறையாக டி20 உலக கோப்பையை முத்தமிட்ட இந்திய அணி வீரர்கள், பார்படாசில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஜிம்பாப்பே புறப்படும் இந்திய அணியுடன் சாம்சன், துபே, ஜெய்ஸ்வால் குறித்த நேரத்தில் இணைய முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு பதிலாக முதல் 2 டி20ல், ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கலக்கிய தமிழகத்தின் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. சுதர்சன் ஏற்கனவே கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். ஜிதேஷ் சர்மாவும் சீனாவில் கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண உள்ள ராணா, சமீபத்திய ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக சிறப்பாகப் பங்களித்தவர். கடைசி 3 போட்டில் சாம்சன், துபே, ஜெய்ஸ்வால் விளையாட உள்ளனர்.
இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்கள்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஹர்ஷித் ராணா.
The post ஜிம்பாப்வே டி20 தொடரில் சுதர்சன், ஜிதேஷ், ராணாவுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.