வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

சென்னை: வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8ம் தேதி உத்தரவு என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். ED வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். ED வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைக்கக் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

The post வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: