ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் சாலையில் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. ராசி புரத்தை அடுத்த ஜேடர் பாளையத்தை சேர்ந்தவர் சாரதா இவர் மகள் திருமணத்திற்காக சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்றுவிட்டு தனியார் பேருந்து மூலம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பேருந்தில் பயணிகள் அமரும் சீட்டை பிடித்து கொண்டிருந்த சாரதா ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதியில் திரும்பிய போது திடீரென கீழே விழுந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சாரதா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

The post ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: