சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் 19 வயது இளைஞர் கோகுல் தனது நண்பர் ஜான் என்பவருடன் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராகேஷ் அவரது நண்பர்கள் கோகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர்.

பின்னர், இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் ரவுடி ராகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கோகுலை கத்தியால் குத்தினர். அதில் படுகாயமடைந்த கோகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ரவுடி ராகேஷ், ராஜ்கமல், குண்டு கார்த்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: