அன்றிலிருந்து அவர் காருக்கான வாடைகையும் கொடுக்காமல், வாகனத்தையும் திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். இது சம்மந்தமாக கடந்த மார்ச் 23ம் தேதி மணிகண்டன் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மனோஜ் பிரபாகர் தலைமறைவாக இருந்ததால் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் டிஎஸ்பி அழகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று 29ம் தேதி மணவாளநகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் குற்றவாளியான மனோஜ் பிரபாகர் என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இதேபோல் 57 நபர்களிடம் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு பெற்று கொண்டு திரும்ப கொடுக்காமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மனோஜ் பிரபாகரிடமிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு நபர்களிடம் ஏமாற்றி எடுத்து வந்த ரூ.2.53 கோடி மதிப்புள்ள 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டியிருப்பதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மனோஜ் பிரபாகர் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சென்னை அருகே கார்களை கடத்தியவர் கைது 26 வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.