சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா பெண்கள் 2 பேர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் வந்த பூரி வாராந்திர விரைவு வண்டியில் பயணியிடம் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். ரயில் பயணிகளை சோதனை செய்த போது 20 கிலோ கஞ்சாவுடன் ஒடிசாவைச் சேர்ந்த 2 பெண்களை கைது செய்தனர். ஒடிசாவைச் சேர்ந்த சரோஜினி, நளினி ஆகியோரிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது போலீஸ். ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் யாரிடம் விற்பனை செய்ய வந்தார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா பெண்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: