மாணிக்கம் மற்றும் சிறுவன் ஆகியோர் கூறியதாவது; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது கடினமாக உள்ளது. அப்படியிருந்தும் போலீசாருக்கு தெரியாமல் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்தோம். பின்னர் போதை மாத்திரைகள் விற்பனை செய்தோம். மும்பைக்கு சென்று ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளை வாங்கிவந்து கோயம்பேடு மார்க்கெட், நெற்குன்றம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 10 மாத்திரைகள் 5 ஆயிரம் என்று விற்பனை செய்தோம். இதில் நல்ல லாபம் கிடைத்தது.இவ்வாறு தெரிவித்தனர். இதையடுத்து இவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 3,000 போதை மாத்திரைகள் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரை புழல் சிறையிலும் சிறுவனை சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.
The post மும்பையில் இருந்து மொத்தமாக வாங்கிவந்து; சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.