ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு

திருமலை:ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அமராவதி உண்டவல்லியில் உள்ள இல்லத்திற்கு தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று காலை சென்றார். அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் அமைச்சர் லோகேஷ் வீட்டு வாசலில் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றனர். சுமார் 2 மணி நேர கலந்துரையாடலுக்கு பிறகு விஜயவாடாவில் உள்ள கனகதுர்கை கோயிலுக்கு சென்று அம்மனை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தரிசித்தார்.

பிறகு ஆளுநர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ சந்திரபாபு நாயுடு வளர்ச்சி பணிகள் குறித்து நன்கு அறிந்தவர், அனுபவம் மிக்கவர். ஆந்திர மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்’ என்றார்.

The post ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: