பீகாரை தொடர்ந்து ஜார்க்கண்டில் பாலம் இடிந்து விழுந்தது

கிரிதிக்: நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாக உள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 11 நாளில் மட்டும் 5 பாலங்கள் இடிந்து விழுந்தன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் தியோதிரி தாலுகாவில் பதேபூர்-பெல்வகாதி சாலையில் தும்ரிடோலா, கரிபக்ரி கிராமங்களை இடைக்கும் அர்கா ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் நேற்று தூண் சாய்ந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இப்பாலம் ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததால் இடிந்ததாக கூறப்படுகிறது.

The post பீகாரை தொடர்ந்து ஜார்க்கண்டில் பாலம் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Related Stories: