எம்எல்ஏ க.கார்த்திகேயன்: சின்னசேலம் வட்டம் கூகையூர் ஊராட்சியில் அமைந்துள்ள சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்ய வேண்டும். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: சொர்ணபுரீஸ்வரர் கோயிலுக்கு 2008ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு நடைபெற்றது.
தற்போது அந்த கோயிலுக்கும் மாநில குழு மற்றும் மண்டல குழு ஒப்புதல் பெறப்பட்டு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் வருமானம் இல்லாத கோயில்களுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்து, திருப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். அதன்படி இந்த கோயிலின் திருப்பணி இந்தாண்டு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
The post வருமானம் இல்லாத கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.