சமூக நீதி காவலர் வி.பி.சிங்கின் 94-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவசிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்-கின் 94-வது பிறந்தநாளை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் அவரது பிறந்தநாளில் அவருடைய உருவசிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இன்று அவருடைய 94-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இருக்க கூடிய வி.பி.சிங்-கின் முழு உருவசிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது மூத்த அமைச்சர்கள் சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ராஜகண்னப்பன், சென்னை மாநகர மேயர் பிரியா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் என ஏராளமான இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறிப்பாக வி.பி.சிங் முழுஉருவச்சிலையை கடந்த வருடம் சென்னையில் உள்ள மாநிலகல்லூரி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சமூக நீதி காவலர் வி.பி.சிங்கின் 94-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவசிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: