முதற்கட்டமாக 36 வீடுகள் கட்டி முடித்த நிலையில் பயனாளிகள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வரவழைக்கப்பட்டனர். தலா ரூ.1.80 மதிப்பிலான வீடுகள் மற்றும் பட்டாக்களை குறைதீர் கூட்டத்திலேயே வசிக்க வீடின்றி தவித்து வந்த 36 குடும்பத்தினருக்கு ஆட்சியர் அருணா வீட்டு மனை பட்டாவுடன் வீடுகளுக்கான ஆணைகளையும் வழங்கினார். தலா ரூ.1.80 மதிப்பிலான வீடுகள் மற்றும் பட்டாக்களை குறைதீர் கூட்டத்திலேயே ஆட்சியர் வழங்கியதால் சேரம்பாடி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடியிருக்க வீடு இன்றி தவித்த தங்களுக்கு இலவச பட்டாவுடன் வீடு கட்டித் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூடலூர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
The post கூடலூரில் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு குறைதீர் கூட்டத்தில் பட்டா: முதலமைச்சருக்கு சேரம்பாடி கிராம மக்கள் நன்றி appeared first on Dinakaran.