நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ. மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 24, 25-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

 

The post நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: