நாகை: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இரண்டு நாள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் மீட்கப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த இரு மீனவர்கள் சென்ற படகு பழுதானதால் வேதாரண்யத்திற்கு வந்தது. இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார், மைக்கேல் பெர்னான்டோ ஆகிய இருவரையும் ஆற்காடுத்துறை மீனவர்கள் மீட்டனர்.