புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கலவரம் ஏற்படுத்தினால்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர முடியும் என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் பேச்சு குறித்து புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.