மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி

டெல்லி: மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. சபாநாயகர் பதவி தங்களுக்கே தர வேண்டும் என்று கேட்டு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது. 3 கட்சிகளும் ஒரு பதவிக்கு குறிவைப்பதால் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தரேஸ்வரியை சபாநாயகராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: