இந்நிலையில் புதுக்கோட்டையை சுற்றியுள்ள 11 ஊராட்சியை முதற்கட்டமாக புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 92 பேர் கைது செய்யப்பட்டனர். முள்ளூர் கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். செட்டியாப்பட்டி விலக்கு சாலையிலும் மறியல் நடந்தது.
The post புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து மறியல் appeared first on Dinakaran.