அனுமதியின்றி கார்களுக்கு பாஸ்டேக் கட்டணம் வசூல் என புகார்..!!

சென்னை: சென்னை விமான நிலையம் வந்து செல்லும் கார்களுக்கு அனுமதியின்றி பாஸ்டேக் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. உரிமையாளர்களுக்குத் தெரியாமல் பாஸ்டேக் கட்டணம் வசூல் என குறுஞ்செய்தி பெறப்படுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தைவிட்டு வெளியேறி 15 நிமிடங்களில் ஏரோஹப் நிறுவனம் சார்பில் ரூ.80 வசூல் செய்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனம் பாஸ்டேக் வசூல் செய்யலாமா? என டாக்ஸி கார் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post அனுமதியின்றி கார்களுக்கு பாஸ்டேக் கட்டணம் வசூல் என புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: