பொள்ளாச்சி பகுதியில் தென்னை வேர் வாடல் நோய் குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு

 

பொள்ளாச்சி, 26: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், தென்னை வாடல் நோய் மீட்பு திட்டம் குறித்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமார பாண்டியன் நேரில், வாடல் நோய் பாதிக்கப்பட்ட தென்னைகளை ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, தென்னை வாடல் நோய் மீட்பு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பசுமை குடில் அமைத்த விவசாயிகளின் வயலை கள ஆய்வு மேற்கொண்டார்.

தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் 91,809 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பல தென்னைகளில் கேரள வாடல் நோயால் பாதிக்கப்பட் டுள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்ற ஒரு விவசாயிக்கு ஒரு ஹெக்டேரில் அதிகபட்சமாக 32 தென்னை மரங்களுக்கு தலா ரூ.1000 என மொத்தம் ரூ.32 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், மறு நடவு செய்ய இலவசமாக தென்னை மரக்கன்றுகளும் உயிர் உரங்களும் வழங்கப்படுகிறது’ என்றார்.

The post பொள்ளாச்சி பகுதியில் தென்னை வேர் வாடல் நோய் குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.