இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் நடந்து சென்றவர்களில் ஒருவர் போலீசாருக்கு தகவல் வழங்க முற்பட்டபோது, அவரிடம் இருந்து அந்த இளம் பெண் செல்போனை பறிக்க முற்பட்டார். இந்த சம்பவத்தை நடந்து சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாகிய நிலையில் இருவரும் நடந்து கொண்ட விதம் குறித்து கண்டித்த பொதுமக்கள் நாகோல் போலீசில் புகார் அளித்தனர். அந்த வீடியோ காட்சிகளும் போலீசாரிடம் வழங்கப்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் நாகோல் போலீசார், இருவர் மீதும் ஐபிசி 341, 504 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஐதராபாத்தில் பரபரப்பு; நடுரோட்டில் நண்பனுடன் பீர் குடித்தபடி இளம்பெண் ரகளை appeared first on Dinakaran.