ரூ. 1.25 லட்சம், 5 பவுன் திருட்டு

கோவை, மே 22: கோவை வெள்ளமடை அருகேயுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் மனைவி சிந்து (32). இவர்கள் பீளமேடு நேரு நகரில் மளிகை கடை நடத்தி வந்தனர். தொழில் நஷ்டம் காரணமாக மனம் உடைந்த பொன்ராஜ், சிந்து ஆகியோர் விஷம் குடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த மளிகை கடையின் கட்டிட உரிமையாளர் ரங்கராஜன், கவிதா உள்ளிட்ட சிலர் பூட்டை உடைக்கு கடைக்குள் சென்று கடையில் இருந்த 5 பவுன் தங்க நகை, 1.25 லட்ச ரூபாய், வீட்டு பத்திரம், ஜிஎஸ்டி ஆவணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக சிந்து அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் கடை பூட்டை உடைத்து திருடிய நபர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கடை வாடகை தராமல் 2 மாதத்திற்கு மேலாக கடையை பூட்டி வைத்திருந்ததால் அத்துமீறி நுழைந்து பொருட்களை இவர்கள் எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ரூ. 1.25 லட்சம், 5 பவுன் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.