போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

திருச்சி, மே 15: திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பஸ் ஸ்டாப் அருகே போதை மாத்திரை விற்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரை விற்ற கூனிபஜார் கோரிமேட்டை சேர்ந்த பாண்டி(27). புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ரவுண்டானா பகுதியை சேர்ந்த ரகமத்துல்லா(23), திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அமீன்(20) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பாண்டி மீது புதுக்கோட்டையில் 7 வழக்குகளும், ரகமத்துல்லா மீது திருச்சி, மதுரையில் 9 வழக்குகளும், அமீன் மீது கோட்டை போலீசில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: